Pin It

Widgets

பருகுதல்

Friday, December 02, 2016 | 0 comments »

மீசை வரையும் பழங்கஞ்சி போல 
உனைப்பருகி 
சுட்ட கருவாடென 
உடலைத் தொட்டுக்கொள்ள வேண்டும்

வரப்பினிடையே விரைந்தோடும்
நீர்க்கால்களின் நடுவே-உன்
தொட்டாச்சிணுங்கி முதுகைக் கிடத்து

தென்னங்கீற்று இடைவெளியில்
உன் முகம் மோதும் வெய்யிலை
இடவலம் ஒதுங்கும் முலைகளின் நடுவே
சாரைப்பாம்பின் நகர்வென திருப்பி விடு

இப்போதைக்கு
மேற்கிலிருந்து இறங்கி வரும் நிழலை
பலாச்சுளையென பருகலாம்.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets