பின்னங்கால் இரண்டிலும்
சக்கரம் ஏறி நடமாடும்
நாய் ஒன்றின் புகைப்படம்
இணையத்தில் கண்டது
நினைவில் வருகிறது

முந்தைய இரவு வாட்ப்பில்
விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக
நாய்களின் இரண்டு காணொளிகள்
பார்த்ததும் காரணமாய் இருக்கலாம்

நேற்றைய நினைவிலிருந்தும்
நாளைய கனவிலிருந்தும்
மரித்துப்போவேன்

உருட்டும் சோழியிலொன்று
தொப்புளில் மலரும் நாளில்

அதுவரை
குரலற்ற இந்தக் காதுகளையறுத்து
பத்திரப்படுத்த
குளிர் மிகுந்த தேகம் ஒன்றை
தேடிக்கொண்டிருக்கிறேன்

...................

Monday, June 08, 2015 | 0 comments »

வெகு தொலைவிற்குப் பிறகு
தோளுக்கு எத்துப் போடும் நாயை
மண்டியிட்டு அனுமதிக்கிறேன்
நக்கித் தீர்க்கும் அதன்
சொரசொரப்பு நாவை
பகல் கூட்டி வந்த
கருமேகத்தின் அணலை
மழைக்குமுன் ஒதுங்கும் பருவத்தின்
பாதத்தில் வரைகிறேன்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை...


Blogger Wordpress Gadgets