நிலவற்ற இரவில்
என் மேனியெங்கும்
வெறுமை பிசுபிசுக்க
கடற்கரையில்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்..
என் கண்ணீரின் சாயல்
இந்தக் கடல் என,
வெகு நேரமாய் என் அன்பினை
இதய வடிவில் விரல்களால் தீட்டி
ஆறுதல் சொல்லிப் பார்கிறேன்...
அலைகள் ஒவ்வொரு முறையும்
என் அன்பினை ஏற்கிறதா
இல்லை வெறுப்புற்று
அழித்துச் செல்கிறதா
என அறியாது மீண்டும் மீண்டும்
இதய ஓவியம் நீட்டுகிறேன்..
எங்களுக்குள் புரிதல்கள்
நிகழ்ந்தபாடில்லை...
நான் அன்பு
செலுத்தி தோற்றதாகவே
இருக்கட்டுமென
என் உயிரினைத் தருவதாய்
உள் இறங்குகிறேன்!
அலைகள் ஒவ்வொன்றும்
உள் இழுப்பதும் வெளியில்
தள்ளுவதுமாய் என் உயிரினை
ஊஞ்சலாக்கி அலைக்கழிக்கின்றன
நான் விழுந்து எழும் வேளையில்
என் முகத்தினில் உமிழ்ந்து
ஆனந்த கூச்சல் செய்கின்றன...
இவைகள் என்னை
உதாசினப்படுத்துகின்றன
என்பதறிந்தும்
மனம் ஒப்பவில்லை....
எப்படியும் என் உயிர் குடித்து
சதைப் பிண்டத்தை
வெளியேற்றுவாய்
என்ற நம்பிக்கையில்
இதோ என் உயிர் மாய்க்கிறேன்!
என் மேனியெங்கும்
வெறுமை பிசுபிசுக்க
கடற்கரையில்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்..
என் கண்ணீரின் சாயல்
இந்தக் கடல் என,
வெகு நேரமாய் என் அன்பினை
இதய வடிவில் விரல்களால் தீட்டி
ஆறுதல் சொல்லிப் பார்கிறேன்...
அலைகள் ஒவ்வொரு முறையும்
என் அன்பினை ஏற்கிறதா
இல்லை வெறுப்புற்று
அழித்துச் செல்கிறதா
என அறியாது மீண்டும் மீண்டும்
இதய ஓவியம் நீட்டுகிறேன்..
எங்களுக்குள் புரிதல்கள்
நிகழ்ந்தபாடில்லை...
நான் அன்பு
செலுத்தி தோற்றதாகவே
இருக்கட்டுமென
என் உயிரினைத் தருவதாய்
உள் இறங்குகிறேன்!
அலைகள் ஒவ்வொன்றும்
உள் இழுப்பதும் வெளியில்
தள்ளுவதுமாய் என் உயிரினை
ஊஞ்சலாக்கி அலைக்கழிக்கின்றன
நான் விழுந்து எழும் வேளையில்
என் முகத்தினில் உமிழ்ந்து
ஆனந்த கூச்சல் செய்கின்றன...
இவைகள் என்னை
உதாசினப்படுத்துகின்றன
என்பதறிந்தும்
மனம் ஒப்பவில்லை....
எப்படியும் என் உயிர் குடித்து
சதைப் பிண்டத்தை
வெளியேற்றுவாய்
என்ற நம்பிக்கையில்
இதோ என் உயிர் மாய்க்கிறேன்!