உன் வாசிப்பிலிருந்து
விடுபட்ட
என் கவிதைகளின்
எண்ணிக்கைத் தெரியுமா?
உன்னைப் பற்றிய
புரிதல்களும்
என் நேசத்தின்
ஆழங்களும்
சத்தியமாய் நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை
ஏன் இந்தக் கேள்வி கூட
நியாமில்லை..
வெயில் இரவில்
பனிப்பொழுதில்
புனையப்படும் உன்னுடனா
சீதோசன உணர்வுகள்
தேதிகளிட்டப்படி
வெற்றுக் காகிதங்களான நாட்களுண்டு
சிலந்தியின் பின்னல்களை
எண்ணத்துவங்கும்
ஒரு கானல் பொழுதில்-என்
விழித்திரையிலிருந்து விடுபட்டிருப்பாய்
அத்தருணங்களில் கண்களில் துவங்கி
தொண்டைக்குழி வந்தடையும்
கண்ணீரில்-நீ
முழுவதுமாய் நிறைந்திருப்பாய்
பின்னொரு பொழுதில்
என் சுய நினனைவிழந்து
உன்னால் புலம்பிட நேரிடலாம்
என் தாயால் நீ தூற்றப்படலாம்
அதனாலயே எக்கடிதத்திலும்
உன் பெயர் எழுதிடவில்லை!
விடுபட்ட
என் கவிதைகளின்
எண்ணிக்கைத் தெரியுமா?
உன்னைப் பற்றிய
புரிதல்களும்
என் நேசத்தின்
ஆழங்களும்
சத்தியமாய் நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை
ஏன் இந்தக் கேள்வி கூட
நியாமில்லை..
வெயில் இரவில்
பனிப்பொழுதில்
புனையப்படும் உன்னுடனா
சீதோசன உணர்வுகள்
தேதிகளிட்டப்படி
வெற்றுக் காகிதங்களான நாட்களுண்டு
சிலந்தியின் பின்னல்களை
எண்ணத்துவங்கும்
ஒரு கானல் பொழுதில்-என்
விழித்திரையிலிருந்து விடுபட்டிருப்பாய்
அத்தருணங்களில் கண்களில் துவங்கி
தொண்டைக்குழி வந்தடையும்
கண்ணீரில்-நீ
முழுவதுமாய் நிறைந்திருப்பாய்
பின்னொரு பொழுதில்
என் சுய நினனைவிழந்து
உன்னால் புலம்பிட நேரிடலாம்
என் தாயால் நீ தூற்றப்படலாம்
அதனாலயே எக்கடிதத்திலும்
உன் பெயர் எழுதிடவில்லை!