Pin It

Widgets

புரிதல்

Thursday, May 03, 2012 | 1 comments »

கேள்விக்கான
பதில் சொல்லுதல் என்பது
பிற்பாடு
காரணம் சொல்லுவதாய் தோன்றலாம்

பின்பு
பொய் சொல்லுவது போன்றோ
சமாளிப்புக்காரன் என்றோ
பட்டம் பெற நேரிடலாம்

அதில் எழும் வாக்குவாதங்கள்
இருவரில் ஒருவரை கெட்டவனென
மனது காட்சிப் படுத்தலாம்

சந்தர்ப்பங்கள் தேடலாம்
சந்தர்ப்பங்கள் அதுவாகவே அமையலாம்
அன்றே அதனை சொன்னேனன்று
பரிகாசமும் எழலாம்

கேள்வி கேட்பதை விட
பதில் சொல்ல முனைவதை விட
புரிதலே ஆரோக்கியம்!

1 comments

  1. www.eraaedwin.com // May 5, 2012 at 12:20 AM  

    அருமை தோழர்.
    கேள்வியோ பதிலோ புரிதல்தானே இலக்கு

Post a Comment

Blogger Wordpress Gadgets