Pin It

Widgets

புறநகர் இரயில் நிலையத்தின்
கடைசி இருக்கைக்கு அழைத்தவள்
அவள் பக்க நியாயங்களையும்
காரணங்களையும் எடுத்துரைத்தாள்

வினவப்படும் வினாக்களுக்கு
அவள் உதிர்த்த
வார்த்தைகள் யாவும்

செங்கற்கட்டு போல
மொத்தமாய் சரிந்து விழுந்தது
நெடுந்தூர கனவின் நடுவில்!

விழித்திரையில்
அடுத்தடுத்து விழும் காட்சிகள்
நிஜமாகிவிடுமோவென அஞ்சுகையில்,

மற்றபடி வேறொன்றும் இல்லை
தொடர்பிலேயே இரு என
விட்டுச் செல்கிறாள்
மணவோலையை!


0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets