புறநகர் இரயில் நிலையத்தின்
கடைசி இருக்கைக்கு அழைத்தவள்
அவள் பக்க நியாயங்களையும்
காரணங்களையும் எடுத்துரைத்தாள்
வினவப்படும் வினாக்களுக்கு
அவள் உதிர்த்த
வார்த்தைகள் யாவும்
செங்கற்கட்டு போல
மொத்தமாய் சரிந்து விழுந்தது
நெடுந்தூர கனவின் நடுவில்!
விழித்திரையில்
அடுத்தடுத்து விழும் காட்சிகள்
நிஜமாகிவிடுமோவென அஞ்சுகையில்,
மற்றபடி வேறொன்றும் இல்லை
தொடர்பிலேயே இரு என
விட்டுச் செல்கிறாள்
மணவோலையை!
கடைசி இருக்கைக்கு அழைத்தவள்
அவள் பக்க நியாயங்களையும்
காரணங்களையும் எடுத்துரைத்தாள்
வினவப்படும் வினாக்களுக்கு
அவள் உதிர்த்த
வார்த்தைகள் யாவும்
செங்கற்கட்டு போல
மொத்தமாய் சரிந்து விழுந்தது
நெடுந்தூர கனவின் நடுவில்!
விழித்திரையில்
அடுத்தடுத்து விழும் காட்சிகள்
நிஜமாகிவிடுமோவென அஞ்சுகையில்,
மற்றபடி வேறொன்றும் இல்லை
தொடர்பிலேயே இரு என
விட்டுச் செல்கிறாள்
மணவோலையை!
0 comments
Post a Comment