ஒரு ராத்திரியில்
வா
கண்ணாமூச்சி விளையாடலாமென்றான்
போ உன் பேச்சு "கா" என்றாள்
வெடுக்கென முகத்தை திருப்பிட்டவளை
கெஞ்சுதல் என்பது அலாதி இன்பமவனுக்கு
அவளது எதிர்ப்பார்ப்பும் அது தான்!
ஒன்னும் வேணாம் போடா என்றாள்
விரல்களுக்கு சொடுக்கெடுக்கும் சாக்கில்
வீரல் நீவி முத்தமிட எத்தனிக்கையில்
சட்டென இழுத்தவள்
டேய்! நீ கள்ளன்டா என்றாள்
நீண்ட இருக்கையில்
கால் நீட்டி சாய்ந்திட்டவளின்
கால்களுக்கு இதமாய் ஒத்தடமிட,
போ போ சமாளிக்காதே என்றாள்
அவிழ்ந்திட்ட கூந்தலை
அவள் அள்ளி முடியும் தருணத்தில்
பட்டென இதழ் முத்தம் பதிக்க
குட்டொன்று வைத்து போடா என்றாள்
இரவின் மின்விளக்கேற்றி
ஒரு குவளை நீர் பருகியவளிடம்
கண்களை சிமிட்டியபடி தாகமெனவும்
அடி வாங்குவ போடா என்றாள்!
இழுத்துப் போர்த்தி புரண்டு படுத்தவளை
இறுக அணைத்து காது கடிக்கையில்
நெஞ்சில் சாய்ந்து சினுங்கியவள்
வெவ்வவே வெவ்வவே போடா என்றாள்!
வா
கண்ணாமூச்சி விளையாடலாமென்றான்
போ உன் பேச்சு "கா" என்றாள்
வெடுக்கென முகத்தை திருப்பிட்டவளை
கெஞ்சுதல் என்பது அலாதி இன்பமவனுக்கு
அவளது எதிர்ப்பார்ப்பும் அது தான்!
ஒன்னும் வேணாம் போடா என்றாள்
விரல்களுக்கு சொடுக்கெடுக்கும் சாக்கில்
வீரல் நீவி முத்தமிட எத்தனிக்கையில்
சட்டென இழுத்தவள்
டேய்! நீ கள்ளன்டா என்றாள்
நீண்ட இருக்கையில்
கால் நீட்டி சாய்ந்திட்டவளின்
கால்களுக்கு இதமாய் ஒத்தடமிட,
போ போ சமாளிக்காதே என்றாள்
அவிழ்ந்திட்ட கூந்தலை
அவள் அள்ளி முடியும் தருணத்தில்
பட்டென இதழ் முத்தம் பதிக்க
குட்டொன்று வைத்து போடா என்றாள்
இரவின் மின்விளக்கேற்றி
ஒரு குவளை நீர் பருகியவளிடம்
கண்களை சிமிட்டியபடி தாகமெனவும்
அடி வாங்குவ போடா என்றாள்!
இழுத்துப் போர்த்தி புரண்டு படுத்தவளை
இறுக அணைத்து காது கடிக்கையில்
நெஞ்சில் சாய்ந்து சினுங்கியவள்
வெவ்வவே வெவ்வவே போடா என்றாள்!
Super :)
நன்றி