Pin It

Widgets

மது

Thursday, May 03, 2012 | 0 comments »

ஜன்னலில் படர்ந்திருந்த
பாகற்கொடியின் இலை ஒன்றினை
இதழில் கவ்வியபடி
தொலை பேசியிலிருந்தாள் மது

"ம்" என்றாள்
இல்லையென்றாள்
சிணுங்கினாள்
கோபமுற்றாள்
கெஞ்சினாள்
விசும்பினாள்

முறிந்த கொடி
மீண்டும் முளைக்க
நீர் ஊற்ற துவங்கினாள் காலையில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets