தடதடக்கும் இரயிலின் சத்தம்
கிறீச்சென தண்டவாளம் உரசும் சத்தம்
பேசித்திரியும் சனங்களின் சத்தம்
இரயிலுக்கான காத்திருப்பு
காதலியின் வருகை
புதுமுகத்தின் அறிமுகம் என
காத்திருக்கும் அந்த நிமிடங்களில்
பார்வையற்றவன் ஒருவன் இசைக்கும்
புல்லாங்குழலின் இசைக்கு
என்றாவது செவி மடுத்ததுண்டா?
வறுமையின் கோடுகள் நிறைந்த
விரல்களின் கீறல்களிலிருந்து கசியும்
அந்த மெல்லிசையை கேட்டுப்பாருங்கள்
அதன் ராகமானது
பார்வையற்றவனென்ற வருத்தமாக இருக்கலாம்
ஆதரவற்றவனென்ற வேதனையாக இருக்கலாம்
அடைக்கலம் இல்லாத ஏக்கமாக இருக்கலாம்
படிப்பில்லையே என்ற வருத்தமாக இருக்கலாம்
உழைக்க முடியவில்லை என்ற ஆதங்கமாக இருக்கலாம்
கடவுள் மேல் உள்ள கோபமாக இருக்கலாம்
கரிசனம் இல்லாத மக்களுக்காக இருக்கலாம்
தூரத்தில் சாப்பாட்டின் வாசனை நுகர்ந்து
அதன் பெருமூச்சில் எழும் தாகமாகவும் இருக்கலாம்
படபடக்கும் உங்கள் காத்திருப்பின்
நிமிடங்களில்
இசையினை உங்கள் காதுகளுக்கு
யார் வார்த்தாலென்ன?
ரசித்துப்பாருங்கள்!
வாசித்து முடிந்து நீளும் அக்கைகளுக்கு
உங்கள் பையிலிருந்து கைக்கேரும் காசு
நிச்சயமாய் சில்லறையாய் இருக்காது!
கிறீச்சென தண்டவாளம் உரசும் சத்தம்
பேசித்திரியும் சனங்களின் சத்தம்
இரயிலுக்கான காத்திருப்பு
காதலியின் வருகை
புதுமுகத்தின் அறிமுகம் என
காத்திருக்கும் அந்த நிமிடங்களில்
பார்வையற்றவன் ஒருவன் இசைக்கும்
புல்லாங்குழலின் இசைக்கு
என்றாவது செவி மடுத்ததுண்டா?
வறுமையின் கோடுகள் நிறைந்த
விரல்களின் கீறல்களிலிருந்து கசியும்
அந்த மெல்லிசையை கேட்டுப்பாருங்கள்
அதன் ராகமானது
பார்வையற்றவனென்ற வருத்தமாக இருக்கலாம்
ஆதரவற்றவனென்ற வேதனையாக இருக்கலாம்
அடைக்கலம் இல்லாத ஏக்கமாக இருக்கலாம்
படிப்பில்லையே என்ற வருத்தமாக இருக்கலாம்
உழைக்க முடியவில்லை என்ற ஆதங்கமாக இருக்கலாம்
கடவுள் மேல் உள்ள கோபமாக இருக்கலாம்
கரிசனம் இல்லாத மக்களுக்காக இருக்கலாம்
தூரத்தில் சாப்பாட்டின் வாசனை நுகர்ந்து
அதன் பெருமூச்சில் எழும் தாகமாகவும் இருக்கலாம்
படபடக்கும் உங்கள் காத்திருப்பின்
நிமிடங்களில்
இசையினை உங்கள் காதுகளுக்கு
யார் வார்த்தாலென்ன?
ரசித்துப்பாருங்கள்!
வாசித்து முடிந்து நீளும் அக்கைகளுக்கு
உங்கள் பையிலிருந்து கைக்கேரும் காசு
நிச்சயமாய் சில்லறையாய் இருக்காது!
0 comments
Post a Comment