சோகம் இன்னதென
சொல்லி விடுவதில்
அவ்வளவு இயலாமை எனக்கு
மெளனத்திற்கான சொற்கள்
படைக்கப்படாத இவ்வுலகில் அதனை
வெளிப்படுத்துதல் இயலாதொன்று
மெளனத்திற்கான உருவத்தினை
கண்ணீரிலோ பிதற்றலிலோ
காட்டிவிட முடியா காலச் சூழ்நிலை
கை காட்டும் திசையெங்கும் பார்க்கும்
கைக்குழந்தை போல
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
ஆறுதலென்று எவரும் இல்லை
உறவுகளின் நடமாட்டமும்
கேலி பேச்சுகளிலும் எழும்
கூச்சலின் ஊடே
பசி மறந்த வயிற்றோடு
பிசு பிசுத்த உடலோடு
வற்றி போன தொண்டையோடு
அறை நோக்கி நகர்கிறேன்
கணங்கள் கனமாய்
கடக்கும் அந்த முதலிரவில்
பாய் போட்டு காத்திருக்கும் கணவனுக்கு
முதலில் எதை பரிமாறுவது?
சொல்லி விடுவதில்
அவ்வளவு இயலாமை எனக்கு
மெளனத்திற்கான சொற்கள்
படைக்கப்படாத இவ்வுலகில் அதனை
வெளிப்படுத்துதல் இயலாதொன்று
மெளனத்திற்கான உருவத்தினை
கண்ணீரிலோ பிதற்றலிலோ
காட்டிவிட முடியா காலச் சூழ்நிலை
கை காட்டும் திசையெங்கும் பார்க்கும்
கைக்குழந்தை போல
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
ஆறுதலென்று எவரும் இல்லை
உறவுகளின் நடமாட்டமும்
கேலி பேச்சுகளிலும் எழும்
கூச்சலின் ஊடே
பசி மறந்த வயிற்றோடு
பிசு பிசுத்த உடலோடு
வற்றி போன தொண்டையோடு
அறை நோக்கி நகர்கிறேன்
கணங்கள் கனமாய்
கடக்கும் அந்த முதலிரவில்
பாய் போட்டு காத்திருக்கும் கணவனுக்கு
முதலில் எதை பரிமாறுவது?