தொடர்ந்து அழைத்தாலும்
கைபேசியில்
பதில் சொல்ல மறுத்தாய்
இல்லையேல் அணைத்து வைத்தாய்
என்னோடு கூடிய
பேருந்து பயணத்தில்-நான்
பேசுவதை கவனிக்காதது போல
அலட்சியபடுத்தினாய்
பொழுதுகள் யாவும் என்னை
குழந்தையென தாங்கிய நீ
ஏனோ முழுவதுமாய் தவிர்த்தாய்
எனது புத்தகங்களில் ஆங்காங்கே
உன் பெயர் எழுதி வந்த நீ
என் பெயர் எழுத துவங்கினாய்
எனது கைக்குட்டை மடிப்பில்
உனது வியர்வை வாசனை
படியாது பார்த்துக்கொண்டாய்
நேரடி சந்திப்புகள் தவிர்த்தாய்
நெஞ்சோர ஈரம் மறைத்தாய்
அன்பை தவிர்த்தாய் தர மறுத்தாய்
நீ
இன்று சமாதானம் பேச வந்தாயாவென
பூச்செண்டு வைக்கும் போது
புரண்டு படுத்திருக்கலாம் கல்லறையில்!
கைபேசியில்
பதில் சொல்ல மறுத்தாய்
இல்லையேல் அணைத்து வைத்தாய்
என்னோடு கூடிய
பேருந்து பயணத்தில்-நான்
பேசுவதை கவனிக்காதது போல
அலட்சியபடுத்தினாய்
பொழுதுகள் யாவும் என்னை
குழந்தையென தாங்கிய நீ
ஏனோ முழுவதுமாய் தவிர்த்தாய்
எனது புத்தகங்களில் ஆங்காங்கே
உன் பெயர் எழுதி வந்த நீ
என் பெயர் எழுத துவங்கினாய்
எனது கைக்குட்டை மடிப்பில்
உனது வியர்வை வாசனை
படியாது பார்த்துக்கொண்டாய்
நேரடி சந்திப்புகள் தவிர்த்தாய்
நெஞ்சோர ஈரம் மறைத்தாய்
அன்பை தவிர்த்தாய் தர மறுத்தாய்
நீ
இன்று சமாதானம் பேச வந்தாயாவென
பூச்செண்டு வைக்கும் போது
புரண்டு படுத்திருக்கலாம் கல்லறையில்!
0 comments
Post a Comment