கூர் தீட்டிய
பென்சில் முனையோடு
கோடு கிழிக்க துவங்கினேன்
கோடுகளற்ற காகிதத்தில்
நிசப்தம் நிறைந்த
அந்த மொட்டை மாடி இரவில்
காற்றின் சலசலப்பு
ஏதுமில்லாதிருந்தது..
தூரத்தில் புணர்ந்து கொண்டிருந்த
பண்பலையின் ஒரு பாடல்
அந்த ஓவியத்திற்கான
முதல் கவனச் சிதறல்
புருவங்கள் மட்டுமே
தீட்டப்பட்டிருந்த அக்காகிதத்தில்,
மெழுகு உருகிடவும்
நிலவு வருடிடவும்
அவள் கவிதையாகிறாள்
நான் கவிஞன் ஆகிறேன்!
பென்சில் முனையோடு
கோடு கிழிக்க துவங்கினேன்
கோடுகளற்ற காகிதத்தில்
நிசப்தம் நிறைந்த
அந்த மொட்டை மாடி இரவில்
காற்றின் சலசலப்பு
ஏதுமில்லாதிருந்தது..
தூரத்தில் புணர்ந்து கொண்டிருந்த
பண்பலையின் ஒரு பாடல்
அந்த ஓவியத்திற்கான
முதல் கவனச் சிதறல்
புருவங்கள் மட்டுமே
தீட்டப்பட்டிருந்த அக்காகிதத்தில்,
மெழுகு உருகிடவும்
நிலவு வருடிடவும்
அவள் கவிதையாகிறாள்
நான் கவிஞன் ஆகிறேன்!
0 comments
Post a Comment