Pin It

Widgets

கூர் தீட்டிய
பென்சில் முனையோடு
கோடு கிழிக்க துவங்கினேன்
கோடுகளற்ற காகிதத்தில்

நிசப்தம் நிறைந்த
அந்த மொட்டை மாடி இரவில்
காற்றின் சலசலப்பு
ஏதுமில்லாதிருந்தது..

தூரத்தில் புணர்ந்து கொண்டிருந்த
பண்பலையின் ஒரு பாடல்
அந்த ஓவியத்திற்கான
முதல் கவனச் சிதறல்

புருவங்கள் மட்டுமே
தீட்டப்பட்டிருந்த அக்காகிதத்தில்,

மெழுகு உருகிடவும்
நிலவு வருடிடவும்
அவள் கவிதையாகிறாள்
நான் கவிஞன் ஆகிறேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets