Pin It

Widgets

அம்முதியவருக்கான அறையில்
மின்விளக்கு பொருத்திய மேஜை
ஒரு மர நாற்காலியும்
ஜன்னலோரத்தில் இடப்பட்டிருந்தது

கதவின் அசைவுகளில் எழும்
கிரீச் சத்தமும்
புத்தக பக்கம் புரட்டுகையில்
காற்றில் சலசலக்கும் காகித சத்தமும்

தண்ணீர் குவளை, சாப்பிடும் தட்டு
முதியவரின் இருமல் சத்தம் தவிர,
வேறெதுவும் அறியாமலிருந்தது அந்த அறை

சப்த நாடியும், மொத்த சத்தமும்
அடங்கிய பின்பொரு நாளில்
விட்டுப் போனவைகளின் குறிப்புகள்
இருக்குமாவென அப்புத்தகம் புரட்டியதில்

புருவங்களின் ரோமங்கள்
365வது பக்கத்தில்
அதிகமாய் உதிர்ந்திருந்தன!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets