Pin It

Widgets

சோகம் இன்னதென
சொல்லி விடுவதில்
அவ்வளவு இயலாமை எனக்கு

மெளனத்திற்கான சொற்கள்

படைக்கப்படாத இவ்வுலகில் அதனை
வெளிப்படுத்துதல் இயலாதொன்று

மெளனத்திற்கான உருவத்தினை
கண்ணீரிலோ பிதற்றலிலோ
காட்டிவிட முடியா காலச் சூழ்நிலை

கை காட்டும் திசையெங்கும் பார்க்கும்
கைக்குழந்தை போல
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
ஆறுதலென்று எவரும் இல்லை

உறவுகளின் நடமாட்டமும்
கேலி பேச்சுகளிலும் எழும்
கூச்சலின் ஊடே

பசி மறந்த வயிற்றோடு
பிசு பிசுத்த உடலோடு
வற்றி போன தொண்டையோடு
அறை நோக்கி நகர்கிறேன்

கணங்கள் கனமாய்
கடக்கும் அந்த முதலிரவில்
பாய் போட்டு காத்திருக்கும் கணவனுக்கு
முதலில் எதை பரிமாறுவது?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets