Pin It

Widgets

தாய்

Thursday, April 19, 2012 | 0 comments »

சுடு சோறு வடிச்ச பக்கத்து வீட்ல
அடுப்பில கெடக்கும் தீக்கங்கில்
எக்கோ இந்த கத்தரிக்காய் சுட்டுகிறேன்
என சொல்லி,
கூடவே ரெண்டு வத்தலும் சுட்டுட்டு
கத்தரிக்காய் தோலுரிச்சி
ஒரு கிண்ணத்துல பிசஞ்சி
புளி கரச்ச தண்ணி ஊத்தி
வத்தல பிச்சி போட்டு
சின்ன உள்ளி நறுக்கி உப்பு கொஞ்சம் போட்டு
இந்தா கஞ்சிக்கு கூட்டு
இத குடிச்சிட்டு
காலேஜிக்கு போன்னு சொல்லுவா அம்மா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets