எனதிந்த இரவை
மெளனமெனும் நூல் கோர்த்து
தனிமையெனும் ஊசியில் தையலிடுகிறேன்
புறக்கணிப்பால்
பிளந்து கிடக்கும் நட்பின் தசைகளை
மிக நெருக்கமாக கோர்த்துப் பார்க்கிறேன்
அதன் தையல்களிலிருந்து
கசியும் குருதியினைப் பார்த்து
ஒருவன் போலி என்கிறான்
மற்றொருவன்
எதுவும் இல்லாதது போல் கடக்கிறான்
கை தேர்ந்த
நாடி வைத்தியன் போல
என் சொற்களின் நடுக்கம் அறிந்தவன்
இன்றதனை நடனம் என்கிறான்
நள்ளிரவு குளியலோடு
கரைத்திட முடியாத உப்பினை
எழுதி தீர்த்திடலாமென்றால்
முனை முறிந்து கிடக்கிறது
என் பேனா!
மெளனமெனும் நூல் கோர்த்து
தனிமையெனும் ஊசியில் தையலிடுகிறேன்
புறக்கணிப்பால்
பிளந்து கிடக்கும் நட்பின் தசைகளை
மிக நெருக்கமாக கோர்த்துப் பார்க்கிறேன்
அதன் தையல்களிலிருந்து
கசியும் குருதியினைப் பார்த்து
ஒருவன் போலி என்கிறான்
மற்றொருவன்
எதுவும் இல்லாதது போல் கடக்கிறான்
கை தேர்ந்த
நாடி வைத்தியன் போல
என் சொற்களின் நடுக்கம் அறிந்தவன்
இன்றதனை நடனம் என்கிறான்
நள்ளிரவு குளியலோடு
கரைத்திட முடியாத உப்பினை
எழுதி தீர்த்திடலாமென்றால்
முனை முறிந்து கிடக்கிறது
என் பேனா!
0 comments
Post a Comment