Pin It

Widgets

எனதிந்த இரவை
மெளனமெனும் நூல் கோர்த்து
தனிமையெனும் ஊசியில் தையலிடுகிறேன்

புறக்கணிப்பால்
பிளந்து கிடக்கும் நட்பின் தசைகளை
மிக நெருக்கமாக கோர்த்துப் பார்க்கிறேன்

அதன் தையல்களிலிருந்து
கசியும் குருதியினைப் பார்த்து
ஒருவன் போலி என்கிறான்
மற்றொருவன்
எதுவும் இல்லாதது போல் கடக்கிறான்

கை தேர்ந்த
நாடி வைத்தியன் போல
என் சொற்களின் நடுக்கம் அறிந்தவன்
இன்றதனை நடனம் என்கிறான்

நள்ளிரவு குளியலோடு
கரைத்திட முடியாத உப்பினை
எழுதி தீர்த்திடலாமென்றால்
முனை முறிந்து கிடக்கிறது
என் பேனா!


0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets