என் பால்யத்தில் விதைத்தவைகளை
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்
துணை வேண்டிடும் இக்காலத்தில்
உணர்தலின் நிமித்தமாய் அழுதிடும் வேளையில்
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்
துணை வேண்டிடும் இக்காலத்தில்
உணர்தலின் நிமித்தமாய் அழுதிடும் வேளையில்
மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார்
உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்று
சிலாகித்து பெருமூச்செடுக்கும் அளவிற்கு
பூங்காவில் அறிமுகமான நபர் ஒருவர்
நெருக்கமாகவே இருக்கிறார் இதயத்திலும்
இழந்து விட்ட மனைவியின் சம பங்கினை
பனி விலகி வெயில் எழும் பொழுதில்-என்
பேரனை நினைவூட்டும் வகையில் சொல்லத்துவங்கினார்
பேத்தி சொல்லிக்கொடுத்தாளென
கம்பிளி பின்னிக்கொண்டிருக்கும் மனைவியை
நாளை அழைத்துச்செல்ல வேண்டுமென,
இவ்விரவும் தூக்கத்தில் மரணம் தாவென
ஒருமுறை கடவுளிடம் வேண்டியாயிற்று
விடியலில் நானிருந்தால் அலலது இருவருமிருந்தால்
சக்கரம் வைத்த தள்ளுவண்டி ஒன்றினை
போனமுறை வருகையில் அடிக்க கை ஓங்கிய
மகனிடம் கேட்க வேண்டும்!
உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்று
சிலாகித்து பெருமூச்செடுக்கும் அளவிற்கு
பூங்காவில் அறிமுகமான நபர் ஒருவர்
நெருக்கமாகவே இருக்கிறார் இதயத்திலும்
இழந்து விட்ட மனைவியின் சம பங்கினை
பனி விலகி வெயில் எழும் பொழுதில்-என்
பேரனை நினைவூட்டும் வகையில் சொல்லத்துவங்கினார்
பேத்தி சொல்லிக்கொடுத்தாளென
கம்பிளி பின்னிக்கொண்டிருக்கும் மனைவியை
நாளை அழைத்துச்செல்ல வேண்டுமென,
இவ்விரவும் தூக்கத்தில் மரணம் தாவென
ஒருமுறை கடவுளிடம் வேண்டியாயிற்று
விடியலில் நானிருந்தால் அலலது இருவருமிருந்தால்
சக்கரம் வைத்த தள்ளுவண்டி ஒன்றினை
போனமுறை வருகையில் அடிக்க கை ஓங்கிய
மகனிடம் கேட்க வேண்டும்!