அவள் உறங்கிவிட்டாளா
உறங்கிக்கொண்டு தான் இருக்கிறாளா என
தனது பார்வையை
இடது பக்கம் கிடத்தியிருக்கிறாள்...

தொடர்ச்சியாக வரும்
வாடிக்கையாளர்களில் சிலர்,
மின் விளக்கு வேண்டும் வேளையில்
தவிர்த்திட முடியாது தோற்க,

இவள் நாசி துடிதுடிக்க
அவள் விழி திறக்க கூடாதென
வேண்டிக் கொள்கிறாள்...

கண்ணீர் வழிய வழிய
கழற்றி எறியும்
ஒவ்வொரு ஆணுறைக்குப் பின்னாலும்,

புதுத் துணிக்கும் புத்தகப் பைக்கும்
நோட்டுப் புத்தகங்களும்,
பள்ளிக் கட்டணங்களுக்கும்
மூன்று வேளை சாப்பாட்டிற்கும்

இவளையே
நம்பி உறங்கிக் கொண்டிருக்கும்
அவள் மகளுக்காக என்பதை,

இவர்கள் எவரும்
அறிய முற்படுவதில்லை
அதை உணர்ந்து உதவுபவன்
புணர்வதில்லை!

யாருக்கும் தெரியாமல்
என் கைக்குள் திணித்து அனுப்பும்
ரெண்டு நாலணாவும்
ஒரு ஐம்பது பைசாவையும்
இன்று காணுகையில்
கண் முன் வந்து போகிறாள்
என் பாட்டி!

குணங்கள்

Sunday, December 11, 2011 | 0 comments »

தன் காலில்
அடி பட்டிருக்கிறது என்பது
அதற்கு தெரியாது...
நடக்கும் போது வலிக்கிறது
என்று மட்டும் தெரியும்..

தன்னை கல் கொண்டு தான்
எறிந்தான் என்பது அதற்கு தெரியாது
எறிந்தது நான் தான்
என்பது அதற்கு நன்றாகவே தெரியும்!

எனது தெருவோர நண்பர்களில்
சிலாகித்தலின் போது-அது
என்னை கடந்து செல்லுகையில்
பயந்து போகிறதென கேலியாய்
சிரித்துப் போனதுண்டு....

என் ஆழ் மனதின் பயம்
அது அறிந்ததால் தான்
என்னை விட்டுச் சென்றிருக்கிறது
என்று பின்பொரு நாள்
புத்தகம் வாசித்தலின் வாயிலாய்
தெரிந்து கொண்டேன்!

அந்த குயிலுக்கு
நன்றாகவே தெரியும்
கருவேப்பிலை மரத்தில்
பூத்து காய்க்கும் காய்கள்
எப்பொழுது கனியும் என்று....

இரும்பு கம்பிகள் வளைத்து
நரம்பு பின்னி, கண்ணி செய்து
அதில் ஒரு
கோவப் பழம் வைத்து அதே
கருவேப்பிலை மரத்தில் வைத்தாலும்,

குயில் திண்ண வரும் என்று
அந்த குயிலின் மாமிசத்துக்காய்
காத்திருக்கும் அந்த வேடனுக்குத் தெரியும்

மேற் சொன்ன வேடனைப் பற்றிய
விசயங்கள் யாவும்
அந்த குயிலுக்குத் தெரியாது

துரோகி இப்படித் தான் கழுத்தருப்பான்
என்பது எனக்கும் தெரியாது

அவளுக்கான பதில்கள்
இன்னும் தீர்மானிக்கப் படவில்லை
அதற்கான கேள்வியும்
அவளிடமிருந்து இருந்து எழ வில்லை
கலவியின் முடிவில்
கனவுகள் இரண்டும்
இரு வேறு திசை நோக்க
மெளனம் மட்டும் இறைந்து கிடக்கிறது...

நீ என்னை
ஆட்டுவிக்கிறாய் என்றும்
நான் உன்னை
ஆட்டம் காட்டுகிறேன் என்றும்,
சிறுவன் பிடியில் சிக்கிய நூலும்
காற்றில் ஆடும் பட்டமும்
அறுந்தோடிய  சந்தோசமும்
ஒரு மாலை வேளையில்
காலம் என்னவென
உணர்த்துகிறது எனக்கு!

மோர் முளகாய் கண்ணு காரி
மாங்கா ஊறுகாய் எடுத்து தாடி
கூழுக்கு உப்பு பத்தல
உன் அழகுக்கு வேட்டி நிக்கல

கடத்தெருவு கண்ண பாரு
கத்தரிக்காய் தொக்கு பாரு
பிரியாணிக்கு காரம் பத்தல
உன் அழகுக்கு தெருவிளக்கு நிக்கல

எடுத்து சொருகும் கொசுவம் பாரு
இடுப்பில் வழியும் வியர்வை பாரு
சாரயத்துல போதை இல்லையே
சிரிச்சிபுட்டா ரொம்ப தொல்லையே

இடுப்பில் ஏறும் தண்ணிக் குடம்
தலை கோதும் முழங்கை நிறம்
கண்ணுக்குள்ள தீய மூட்டுற
கை தொட்டா தண்ணி காட்டுற

ஆத்தங்கர கெண்ட மீனு
துள்ளி குதிக்கும் அயிர மீனு
தூண்டில் போட்டும் சிக்க வில்லையே
நீ தூண்டில் போட்டும் சிக்க வில்லையே

கலவிய பின்

Sunday, December 11, 2011 | 0 comments »

அடை மழைக் குளிரானாலும்
அனல் கக்கிய இரவானாலும்
உன் பசியறிந்து
பாய் விரிக்கிறேன்...

நான் விழி மூடி
என் கனவோடு
உனை எதிர் நோக்க
ஆடை கழற்ற துவங்குகிறாய்

கதை பேசி
விரல்கள் சீண்டி
மோகம் கொளுத்தி
குளிர் காய்ந்து

என் தாகம் புரிந்து
விளையாடுவாயென
இந்த இரவும் தவமிருக்கிறேன்...

என் பாதங்கள் வருடி
தலைக் கோதி
நக கோடுகள் நீட்டுவாயென
கனவும் உண்டெனக்கு!

என் காதுமடல்கள்
உன் மூச்சிக் காற்றில்
சிவந்த இரவுகள் எல்லாம்
கானல் இரவு!

இருவர் மேனியில்
உதிரும் வெப்பச் சிதறல்கள்
வியர்வையாய் பொழிய
உன்னிலிருந்து
தனித்து விடப்படுகிறேன்....

நீ உண்ட மிச்சத்தில்
நான் பசியாற
காத்திருக்கிறேன்
பரிமாற நீ
தயாரில்லை என்கிறாய்!

உனது உச்சத்தில்
உடைந்து போகிறது
எனது கனவுகள்
தொடர்ந்து ஏமாறுவது
என் ஆசைகள்....

நிர்வாண அறையில் எனது
முனங்கள்களற்று
நாற்புரமாய் சுவர்கள்
திரும்பி விட்டது
கலவி முடித்த
உன்னைப் போல...

உன்னையே
சுற்றிச்சுற்றி வருகிறேன்
கடிகார முட்கள் போல!

Blogger Wordpress Gadgets