Pin It

Widgets

கலவிய பின்

Sunday, December 11, 2011 | 0 comments »

அடை மழைக் குளிரானாலும்
அனல் கக்கிய இரவானாலும்
உன் பசியறிந்து
பாய் விரிக்கிறேன்...

நான் விழி மூடி
என் கனவோடு
உனை எதிர் நோக்க
ஆடை கழற்ற துவங்குகிறாய்

கதை பேசி
விரல்கள் சீண்டி
மோகம் கொளுத்தி
குளிர் காய்ந்து

என் தாகம் புரிந்து
விளையாடுவாயென
இந்த இரவும் தவமிருக்கிறேன்...

என் பாதங்கள் வருடி
தலைக் கோதி
நக கோடுகள் நீட்டுவாயென
கனவும் உண்டெனக்கு!

என் காதுமடல்கள்
உன் மூச்சிக் காற்றில்
சிவந்த இரவுகள் எல்லாம்
கானல் இரவு!

இருவர் மேனியில்
உதிரும் வெப்பச் சிதறல்கள்
வியர்வையாய் பொழிய
உன்னிலிருந்து
தனித்து விடப்படுகிறேன்....

நீ உண்ட மிச்சத்தில்
நான் பசியாற
காத்திருக்கிறேன்
பரிமாற நீ
தயாரில்லை என்கிறாய்!

உனது உச்சத்தில்
உடைந்து போகிறது
எனது கனவுகள்
தொடர்ந்து ஏமாறுவது
என் ஆசைகள்....

நிர்வாண அறையில் எனது
முனங்கள்களற்று
நாற்புரமாய் சுவர்கள்
திரும்பி விட்டது
கலவி முடித்த
உன்னைப் போல...

உன்னையே
சுற்றிச்சுற்றி வருகிறேன்
கடிகார முட்கள் போல!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets