Pin It

Widgets

மோர் முளகாய் கண்ணு காரி
மாங்கா ஊறுகாய் எடுத்து தாடி
கூழுக்கு உப்பு பத்தல
உன் அழகுக்கு வேட்டி நிக்கல

கடத்தெருவு கண்ண பாரு
கத்தரிக்காய் தொக்கு பாரு
பிரியாணிக்கு காரம் பத்தல
உன் அழகுக்கு தெருவிளக்கு நிக்கல

எடுத்து சொருகும் கொசுவம் பாரு
இடுப்பில் வழியும் வியர்வை பாரு
சாரயத்துல போதை இல்லையே
சிரிச்சிபுட்டா ரொம்ப தொல்லையே

இடுப்பில் ஏறும் தண்ணிக் குடம்
தலை கோதும் முழங்கை நிறம்
கண்ணுக்குள்ள தீய மூட்டுற
கை தொட்டா தண்ணி காட்டுற

ஆத்தங்கர கெண்ட மீனு
துள்ளி குதிக்கும் அயிர மீனு
தூண்டில் போட்டும் சிக்க வில்லையே
நீ தூண்டில் போட்டும் சிக்க வில்லையே

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets