Pin It

Widgets

குணங்கள்

Sunday, December 11, 2011 | 0 comments »

தன் காலில்
அடி பட்டிருக்கிறது என்பது
அதற்கு தெரியாது...
நடக்கும் போது வலிக்கிறது
என்று மட்டும் தெரியும்..

தன்னை கல் கொண்டு தான்
எறிந்தான் என்பது அதற்கு தெரியாது
எறிந்தது நான் தான்
என்பது அதற்கு நன்றாகவே தெரியும்!

எனது தெருவோர நண்பர்களில்
சிலாகித்தலின் போது-அது
என்னை கடந்து செல்லுகையில்
பயந்து போகிறதென கேலியாய்
சிரித்துப் போனதுண்டு....

என் ஆழ் மனதின் பயம்
அது அறிந்ததால் தான்
என்னை விட்டுச் சென்றிருக்கிறது
என்று பின்பொரு நாள்
புத்தகம் வாசித்தலின் வாயிலாய்
தெரிந்து கொண்டேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets