Pin It

Widgets

அவள் உறங்கிவிட்டாளா
உறங்கிக்கொண்டு தான் இருக்கிறாளா என
தனது பார்வையை
இடது பக்கம் கிடத்தியிருக்கிறாள்...

தொடர்ச்சியாக வரும்
வாடிக்கையாளர்களில் சிலர்,
மின் விளக்கு வேண்டும் வேளையில்
தவிர்த்திட முடியாது தோற்க,

இவள் நாசி துடிதுடிக்க
அவள் விழி திறக்க கூடாதென
வேண்டிக் கொள்கிறாள்...

கண்ணீர் வழிய வழிய
கழற்றி எறியும்
ஒவ்வொரு ஆணுறைக்குப் பின்னாலும்,

புதுத் துணிக்கும் புத்தகப் பைக்கும்
நோட்டுப் புத்தகங்களும்,
பள்ளிக் கட்டணங்களுக்கும்
மூன்று வேளை சாப்பாட்டிற்கும்

இவளையே
நம்பி உறங்கிக் கொண்டிருக்கும்
அவள் மகளுக்காக என்பதை,

இவர்கள் எவரும்
அறிய முற்படுவதில்லை
அதை உணர்ந்து உதவுபவன்
புணர்வதில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets