Pin It

Widgets

அந்த குயிலுக்கு
நன்றாகவே தெரியும்
கருவேப்பிலை மரத்தில்
பூத்து காய்க்கும் காய்கள்
எப்பொழுது கனியும் என்று....

இரும்பு கம்பிகள் வளைத்து
நரம்பு பின்னி, கண்ணி செய்து
அதில் ஒரு
கோவப் பழம் வைத்து அதே
கருவேப்பிலை மரத்தில் வைத்தாலும்,

குயில் திண்ண வரும் என்று
அந்த குயிலின் மாமிசத்துக்காய்
காத்திருக்கும் அந்த வேடனுக்குத் தெரியும்

மேற் சொன்ன வேடனைப் பற்றிய
விசயங்கள் யாவும்
அந்த குயிலுக்குத் தெரியாது

துரோகி இப்படித் தான் கழுத்தருப்பான்
என்பது எனக்கும் தெரியாது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets