அந்த உரையாடலானது
உனக்குப் பாசமில்லையென துவங்கியது
விலகிச் செல்வது பற்றியும்
உறவாடுதல் பற்றியும்
வெகுநேரம் பேசியும் முடிவேதுமில்லை
காற்றில் தவறிய காக்கை கூட்டின்
முள்ளொன்று காலில் ஏறியது போலிருந்தது
நெடுநாள் உறவின் விளக்கத்தின்
ஊடே
அவளின் வெடித்த சிரிப்பு சத்தம்...
வெறுப்பின் உச்சத்தில் விடைபெற
எத்தனிக்கையில் உறவின் கை நீட்டி
உன் கோபம் அறிவேன் என்கிறாள்
தாயொருத்தி குழந்தையை அடித்துவிட்டு
பதறியபடி கொஞ்சுவாளே
அது போலில்லை-அது,
மரம் இழைக்கும் ஒருவனின்
கூரிய கத்தி போலிருந்தது...
பைத்தியக்காரனின் புலம்பல் என
கேளாதபடி ஒவ்வொரு முறையும் கடந்து செல்
ஏதோ ஒரு இரவின் கடைசிப்பிணமாவாய் நீ!
உனக்குப் பாசமில்லையென துவங்கியது
விலகிச் செல்வது பற்றியும்
உறவாடுதல் பற்றியும்
வெகுநேரம் பேசியும் முடிவேதுமில்லை
காற்றில் தவறிய காக்கை கூட்டின்
முள்ளொன்று காலில் ஏறியது போலிருந்தது
நெடுநாள் உறவின் விளக்கத்தின்
ஊடே
அவளின் வெடித்த சிரிப்பு சத்தம்...
வெறுப்பின் உச்சத்தில் விடைபெற
எத்தனிக்கையில் உறவின் கை நீட்டி
உன் கோபம் அறிவேன் என்கிறாள்
தாயொருத்தி குழந்தையை அடித்துவிட்டு
பதறியபடி கொஞ்சுவாளே
அது போலில்லை-அது,
மரம் இழைக்கும் ஒருவனின்
கூரிய கத்தி போலிருந்தது...
பைத்தியக்காரனின் புலம்பல் என
கேளாதபடி ஒவ்வொரு முறையும் கடந்து செல்
ஏதோ ஒரு இரவின் கடைசிப்பிணமாவாய் நீ!