Pin It

Widgets

அடிக்கடி வானில் வந்து போயின
வெள்ளை நிற மின்னல் கோடுகள்

வருமிடம் கனிக்க முடியாததாகவும்
வளைவு நெளிவுகளோடுமிருந்தன

ஈரக்காற்றில்
உப்புக்காற்று மறந்து கண் நோக்க

பச்சை பூசிய வெள்ளை நிற
தெருவிளக்குகள் சாலையெங்கும்
வரிசை கட்டி நின்றிருந்தன

பால்யம் பேசும் வயதானவர்கள்
காதல் பேசும் இளவட்டங்கள்
தனிமை ருசிக்கும் தனியொருவன்

பிள்ளைகளோடு வந்த பெற்றோர்கள்
ரோட்டோரம் துயிலும் இருந்தும் இல்லாதவர்கள்
கூட்டம் கூட்டமாய் நரிகுறவர்கள்

குடிகாரனின் புலம்பல்
கார்களில் இருந்து எழும் ஒலி
உணவுக் கடைகள்

விலை மகள் விலைமகன்
திருநங்கை ஓரினச்சேர்கையாளர்கள் என
அவர் அவர் விருப்பபடி அவர் அவர்

வெட்டிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகள்
துளிகளாய் துளிகளாய் பெரு மழையாய்
பொழியத் துவங்கியது....

கடலுக்கு
அலையின் கீதம் கேட்க துவங்கிற்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets