பயன்படுத்தப்படாத
அந்த வீட்டின் அருகே
தன் துணையோடு
புணர்ந்து
கொண்டிருந்தது நாய்
தற்செயலான
நிகழ்வு இல்லை
எனினும்,
நிலைமை புரிகிறது
இரவுக் காவலாளிக்கு
பிரித்திடாமலும் விரட்டிடாமலும்
அதன் விருப்பத்திற்கு விட்டுவிட்டு
அம்முதியவர் மிச்சம் வைத்த சுருட்டினை
புகைத்த
படி,
தெருவோரம்
கடந்து செல்பவர்
முகம் கோணாதிருக்கவும்,
சுண்டல்
விற்று பிழைப்பு நடத்தும்
அணாதைச்
சிறுவன் காணாதிருக்கவும்
அணைத்து
வருகிறார் தெருவிளக்கை
மங்கிய வெளிச்சத்தில் கடற்கரை காற்றில்
காமுகர்களின் கவிச்சியை நுகர்ந்த
அவன்
முன்னமே
விலை மாதுவால்
நிராகரிக்கப்பட்ட
சிறுவனாக கூட இருக்கலாம்!