தினமும்
கடந்து செல்லும்
நடை பாதைகள் என்றுமே
என் விழிகளை நேர் கோட்டில்
பயணிக்க
அனுமதிப்பதில்லை...
ஏதேனும்
ஒரு நிகழ்வினை
கடை விரித்து
என் சிந்தனைகளை
பிடுங்கித்
தின்னும்...
குழந்தையின்
பிறந்த நாள் அறிவிப்பு,
கல்யாண
வாழ்த்துச்
செய்தி,
காணாமல்
போனவர்
பற்றிய அடையாள குறிப்பு
என நீளும் இப்பட்டியலில்
இது போல் நானென்றும்
அது போல் நானென்றும்
சுவரொட்டியில்
ஒட்டிக்
கொள்கிறது என் உருவம்...
இளைஞன் ஒருவனுக்கு
சொல்லப்படும்
நண்பர்களின் கண்ணீர் அஞ்சலி
காணுகையில்
மட்டும்
எனக்கு முன்
வீற்றிருக்கிறான்
நண்பன் ஒருவன்!
0 comments
Post a Comment