Pin It

Widgets

புதிர்

Sunday, January 29, 2012 | 0 comments »


தூக்கம் கலைகையில்
விடுபட்டுப் போன
கனவொன்றினை
தொடரலாம் என
கடிகாரம் காண்கிறேன்...

எனக்கு சாதகமான
நேரத்தினை கண் காணவும்,
பயணிக்கிறேன்
அக்கனவினை நோக்கி

கழுத்தினை இறுக்கி
கொண்டிருந்த கைகளானது
யாருடையதென கண்மூடிய படி
தொட்டுப் பார்க்கிறேன்

ஓசையெழுப்பும்
கண்ணாடி வளையல்கள் கொண்டு
அவள் வாலிப பிராயத்துக்காரியென
தீர்மானித்துக் கொள்கிறேன்

பிடியின் இறுக்கம் கூடுவதும்
பிற்பாடு தளர்வதும் கண்டு
அவள் சோர்வுதனை உணர்ந்து,
நேரம் விடுத்து பின் தொடருகிறேன்...

பிய்த்து எறியப் பட்ட பூக்களும்
கலைக்கப் பட்ட குங்குமமும்
கைகளை அறுத்த வளையல்வடுக்களும்
பழக்கப்பட்டுப் போன எனக்கு,

எத்தனையோ
அழுகுரல்களை கடந்து விட்டதாலும்
காலம் இவள் காயம் ஆற்றுமென
தொடருகிறேன்....

இந்த கனவு என்னதென நீங்களே
தீர்மானியுங்கள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets