Pin It

Widgets


பூனை ஒன்று
திண்ணையில் அமர்ந்தபடி
வீதியை பார்த்துக் கொண்டிருந்தது

தன்னை வளர்த்தவன் வரும்
நேரம் என்னவென்பது
நன்றாகவே அறிந்து வைத்திருந்தது...

அது பழக்கப்பட்ட பூனை!

அவன் வீடு வந்ததும்
வாசலில் வழி மறித்து
கால்களை உரசி
சுற்றிச்சுற்றி வந்தது

பாசமோ பசியோ
என்னதென அறியாதவன்
தன் கருப்பு கால் சட்டையில்
பூனையின் முடி ஒட்டி விட்டதாய்
உதைத்து விடுகிறான்...

பின்னாளில் உதவி
கேட்க நேரிடலாம் என்பதை
அந்த கோபக் காரன்
யோசிக்க வில்லை

முற்றத்தில் விழுந்த பூனையானது
மீண்டும் அவனை நோக்கி நடக்க
மதில் சுவர் பொந்தில் இருந்த
எலி ஒன்று சிரித்து விடவும்
கோபத்தில் கடித்து விடுகிறது

எலியின் இரத்த வாடையும்
திருப்பி அடிக்காததும்,
மாமிசமும் பிடித்து போக
பூனை எலியை வேட்டையாட துவங்கி விட்டது...

இந்த பூனைகள் யாவும்
எலிகளை அடிமையாகவும்
கால சுழற்சியில்,

அந்த பூனைகள்
காட்டுப் பூனையாக மாறி
வளர்த்தவனையே பயம் காட்டியது
என்றொரு செய்தி யாருக்கும் வியப்பில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets