குறிப்பிடத்தக்க சொற்கள்
கீழ் விழாமல் நாவினில்
அடுக்கி
வைத்த வார்த்தைகளானது
மழைக்கு
ஒதுங்கிய
குருவி கண்டதும்
வார்த்தை
ஒன்று விழுகிறது
சாரல் ஒன்று தேகத்தில்
சில்லென
நனைக்கவும்
மற்றுமொரு
வார்த்தை தவறுகிறது
தற்செயலாய்
தேனிர் கடையில் ஒலித்த பாடலில்
முன்னமே
விழுந்த வார்த்தை ஒன்று
முனுமுனுக்கிறது
பரிட்சையமற்றவர் போன்றதொரு
உருவம் கடந்து போகையில்
பின்னுமொரு
வார்த்தை தடுக்கி விழுகிறது
நல்ல வேளை யார் கண்களிலும் படவில்லை
காதுகளிலும் விழவில்லை
நீங்களும் இது போல் பேசிப்பாருங்கள்!
0 comments
Post a Comment