Pin It

Widgets


ஏனோ அவனுக்கு
கல்லரைத் தோட்டம் மீது
அவ்வளவு பிரியம்

அங்கே, தான் தனக்கு  
என்றோரு எண்ணம்
வருவதே இல்லை

மனிதம் அடர்ந்த தோட்டத்தில்
இளைப்பாருதல் என்பது
தன்னிலை மறந்த கனவு

நெடுநேரம் அமர்ந்த்திருப்பான்
கற்களால் ஆன
கல்லறையில் தலை சாய்ப்பான்

தனித்து விடப்பட்ட
அதன் தன்மை தனிமை
படுக்கையறையிலும் நுகர்ந்திடாத ஒன்று

கோபத்தின் வீரியம்
இயலாமையின் இழப்பு
அறியாமையின் ஆவல்
என நீளும் பட்டியல்

மெளனத்தினால் பிழியப்பட்டு
விழியின் வழியே வழியும்
கண்ணீர் சாற்றின் சுவையினை

புசித்து மருந்தாற்றிய
அக்கல்லறைத் தோட்டத்திற்கு
அடுத்தமுறை கவிதை
சமைத்துத் தருவதாக சொல்லியிருக்கிறான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets