வீட்டின்
முன் கூரையின்
வழியே வழியும்
மழைத் துளிகளை
தன் இரு கைகளையும்
குவித்து
வீட்டிற்குள்
பற்றிச்
செல்கிறாள் குழந்தை...
சொட் சொட்டென
பாத்திரத்தில் விழுந்து கொண்டிருக்கும்
மழைத் துளிக்கு போட்டியாய்,
அதனருகில்
இன்னுமொரு
பாத்திரம்
வைத்து
ஊற்ற துவங்கியிருக்கிறாள்
முதலில்
நிறைப்பது யாரென்று...
வேகமாய்
நிறைந்து விடும்
மழைத் துளி நீரை
அடுப்படியில் ஊற்றி விட்டு,
தன் குழந்தை வாகை சூடட்டுமென
தன் வறுமை மறந்து
ரசித்துக் கொண்டிருக்கிறாள் தாய்!
0 comments
Post a Comment