நிசப்தமில்லா சாலையில்
சில நெருடல்கள்...
ஓடிக்கொண்டே இருக்கிறது
சமிஞ்கையில் கூட
அவன் மன ஓட்டங்கள்
பயணித்து
முடிந்து
மீண்டும்
தொடரும்
அந்தக் கடிகாரத்திற்குள்
சிக்கிக்
கொண்ட முட்களாய்
அவனது கால ஓட்டங்கள்,
பன்னிரண்டு
புள்ளிகளுக்கிடையே
ஒவ்வொரு
பன்னிரண்டு
முறையும்
இணைந்து
பிரிந்து
விடுகிறது
சிந்தனையும்
இதயமில்லா
இதயமும்!
நிரந்திரமில்லா வேலை
இதுவே நிரந்திரமாகிவிடுமோ
என்ற கவலையும்
தேநீரோடு
பகிர்ந்து கொள்ளும்
நள்ளிரவு
உரையாடல்
நீள்கிறது
நண்பர்களோடு...
எல்லோரும்
பற்றவைத்து
தொடர்கிறார்கள்
அவர் அவர் வயிற்றெரிச்சலை...
அணைத்து
விடலாம்
என்பதற்குள்
அந்த பத்து நிமிடமும்
முடிந்து
விடுகிறது!
அவன் இதயம் மட்டும்
சத்தமாகவே
சொல்கிறது
முடிந்தால்
திருத்த
முயற்சி
செய்
இல்லையென்றால்
திருந்த
முயற்சி செய்
என்றாவது வெல்வாய் என்று!
0 comments
Post a Comment