தோட்டத்தில்
மல்லிகை
பூப்பறித்து
குளித்து
வீடு திரும்புகையில்
மலைக்கு
மேய செல்லும்
மாட்டின்
கால்களில்
இருந்து
எழுதும்
செம்மண்
புழுதி-உன்
ஈரச்
சட்டையில்
அப்பிக்
கொள்ளுமென
போர்த்தி
விட்ட துண்டு
இன்னும்
இதமாக கதகதப்பு
அப்பா!
0 comments
Post a Comment