Pin It

Widgets

நாய்

Wednesday, July 18, 2012 | 0 comments »

கண்கள் முழுக்க விரக்தியாகவே தெரிந்தது
ஏதோ ஒரு சூழ்நிலையில் சபிக்கப்பட்டிருக்கலாம்
வாலாட்ட கூட இயலவில்லை

இரவு முழுக்க தூங்காமல் அழுதிருக்கலாம்
கண்ணீர் கோடுகளும்
பூளை வடிந்த தடமிருந்தது

தன்னை கடந்து போகும் கால்களையும்
தேனீர் கடையையும்
கழுத்தினை தூக்கியவாரு பார்த்துக் கொண்டிருந்தது

தன் தாயையோ தந்தையையோ
தேடும் அறிவு இருப்பதாய் தெரியவில்லை
தனக்கு ஜோடி கிடைக்கும் என்ற நம்பிக்கையும்
அது இழந்திருக்கலாம்

நாய்கள் ஜாக்கிரதை
என்றொரு கதவு திறக்கவும்
வேறொரு நிழல் தேடி நடக்கத்துவங்கியது

உங்களுக்குத் தெரியுமா?
அந்த தெரு நாய்க்கு
முன்னங்கால்கள் மட்டுமே இருந்தது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets