என் இரவின் இசை
எப்படி கேட்கிறது தெரியுமா?
பற்றி எரியும் தேகத்தின் சூட்டில்
கதறும் ஊமையின் குரல் போன்றது அது
என் இரவின் வாசனை
எப்படி நாசி துளைக்கிறது தெரியுமா?
பற்களின் ஈறுகளில் கசியும்
குருதியின் வாடை போன்றது அது
என் இரவின் எண்ணங்கள்
எப்படி எனையாளுகிறது தெரியுமா?
நேசத்தின் கரங்களில்லாத
திண்ணை கிழவனின் பெருமூச்சு போன்றது அது
என் இரவின் வார்த்தைகள்
எப்படி உளறுகிறது தெரியுமா?
வெடித்த சிரிப்புடன் அழும்
பிரியத்தின் பிதற்றல்கள் போன்றது அது
என் இரவின் காட்சிகள்
எப்படி ஒளிருகிறது தெரியுமா?
முகமேதும் தெரியாமல் ஓரிரு கைகள் மட்டும்
என் பிணத்தில்
மண்ணள்ளி போடுவது போன்றது அது
எப்படி கேட்கிறது தெரியுமா?
பற்றி எரியும் தேகத்தின் சூட்டில்
கதறும் ஊமையின் குரல் போன்றது அது
என் இரவின் வாசனை
எப்படி நாசி துளைக்கிறது தெரியுமா?
பற்களின் ஈறுகளில் கசியும்
குருதியின் வாடை போன்றது அது
என் இரவின் எண்ணங்கள்
எப்படி எனையாளுகிறது தெரியுமா?
நேசத்தின் கரங்களில்லாத
திண்ணை கிழவனின் பெருமூச்சு போன்றது அது
என் இரவின் வார்த்தைகள்
எப்படி உளறுகிறது தெரியுமா?
வெடித்த சிரிப்புடன் அழும்
பிரியத்தின் பிதற்றல்கள் போன்றது அது
என் இரவின் காட்சிகள்
எப்படி ஒளிருகிறது தெரியுமா?
முகமேதும் தெரியாமல் ஓரிரு கைகள் மட்டும்
என் பிணத்தில்
மண்ணள்ளி போடுவது போன்றது அது
0 comments
Post a Comment