Pin It

Widgets

வைத்த புள்ளிகள்
எதும் கோலமாகவில்லை

போட்டு வைத்த கோடுகள்
எதுவும் ஓவியமாகவில்லை

குவித்த மணல் குவியல்கள்
எதுவும் சிற்பமாகவில்லை

என் நதியோடும் பாதை
என் கட்டுப்பாட்டிலில்லை

என் இருளில் எழும் பிம்பம்
நானாக தீர்மானிப்பதில்லை

தூரத்தில் கேட்கும் அலறல் சத்தம்
ஏன் என் குரல் என பிடிபடவில்லை

காலத்தின் பிணக்கில்
என்னையெனக்கு அடையாளம் தெரியவில்லை

கதறி அழுதிடவோ கடந்து செல்லவோ
என் பிடியில் நானில்லை

காலப்பெருவெளியில்
இக்கால இடைவெளியில்

என் வனம் எரிந்தது
என் மனம் எரிந்தது
என் திறன் எரிந்தது
புல்லாங்குழல் கிழிந்தது
குரல்வளை வற்றியது
இதயம் கனத்தது
இருள் திண்றது

மூச்சுத்திணறலை மையாக்கி
காகிதத்தால் சுவாசித்தேன்

எதை எதையோ எழுதியவன் நான்தான்
எனினும்
இன்னும் கொஞ்சம் ஆசுவாசம் வேண்டுகிறேன்

சிறிய இடைவேளைக்குப்பிறகு
மீண்டு(ம்) வருகிறேன்

இறுதியாக
ஒரு உரிமையில் கேட்கிறேன்
என்னை மன்னிப்பாயா?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets