வைத்த புள்ளிகள்
எதும் கோலமாகவில்லை
போட்டு வைத்த கோடுகள்
எதுவும் ஓவியமாகவில்லை
குவித்த மணல் குவியல்கள்
எதுவும் சிற்பமாகவில்லை
என் நதியோடும் பாதை
என் கட்டுப்பாட்டிலில்லை
என் இருளில் எழும் பிம்பம்
நானாக தீர்மானிப்பதில்லை
தூரத்தில் கேட்கும் அலறல் சத்தம்
ஏன் என் குரல் என பிடிபடவில்லை
காலத்தின் பிணக்கில்
என்னையெனக்கு அடையாளம் தெரியவில்லை
கதறி அழுதிடவோ கடந்து செல்லவோ
என் பிடியில் நானில்லை
காலப்பெருவெளியில்
இக்கால இடைவெளியில்
என் வனம் எரிந்தது
என் மனம் எரிந்தது
என் திறன் எரிந்தது
புல்லாங்குழல் கிழிந்தது
குரல்வளை வற்றியது
இதயம் கனத்தது
இருள் திண்றது
மூச்சுத்திணறலை மையாக்கி
காகிதத்தால் சுவாசித்தேன்
எதை எதையோ எழுதியவன் நான்தான்
எனினும்
இன்னும் கொஞ்சம் ஆசுவாசம் வேண்டுகிறேன்
சிறிய இடைவேளைக்குப்பிறகு
மீண்டு(ம்) வருகிறேன்
இறுதியாக
ஒரு உரிமையில் கேட்கிறேன்
என்னை மன்னிப்பாயா?
எதும் கோலமாகவில்லை
போட்டு வைத்த கோடுகள்
எதுவும் ஓவியமாகவில்லை
குவித்த மணல் குவியல்கள்
எதுவும் சிற்பமாகவில்லை
என் நதியோடும் பாதை
என் கட்டுப்பாட்டிலில்லை
என் இருளில் எழும் பிம்பம்
நானாக தீர்மானிப்பதில்லை
தூரத்தில் கேட்கும் அலறல் சத்தம்
ஏன் என் குரல் என பிடிபடவில்லை
காலத்தின் பிணக்கில்
என்னையெனக்கு அடையாளம் தெரியவில்லை
கதறி அழுதிடவோ கடந்து செல்லவோ
என் பிடியில் நானில்லை
காலப்பெருவெளியில்
இக்கால இடைவெளியில்
என் வனம் எரிந்தது
என் மனம் எரிந்தது
என் திறன் எரிந்தது
புல்லாங்குழல் கிழிந்தது
குரல்வளை வற்றியது
இதயம் கனத்தது
இருள் திண்றது
மூச்சுத்திணறலை மையாக்கி
காகிதத்தால் சுவாசித்தேன்
எதை எதையோ எழுதியவன் நான்தான்
எனினும்
இன்னும் கொஞ்சம் ஆசுவாசம் வேண்டுகிறேன்
சிறிய இடைவேளைக்குப்பிறகு
மீண்டு(ம்) வருகிறேன்
இறுதியாக
ஒரு உரிமையில் கேட்கிறேன்
என்னை மன்னிப்பாயா?
0 comments
Post a Comment