Pin It

Widgets

பின்பு
அவள் கெஞ்சியபடியே
கன்னத்தில் முத்தமிட்டாள்

எனக்கும் முத்தமிட தோன்றியது
கொஞ்சமாய் சிரித்தபடி
அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்தேன்

தென்னங் கீற்றின் வழியே வழியும்
மழைநீர் போல அவள் கண்ணீர்
மெல்லிய கோடு போல்
கன்னம் வடிந்து கொண்டிருந்தது

என் கைக்குட்டை வாங்கியவள்
எதற்கெடுத்தாலும் நன்றி சொல்லி பழகியவள்
எதுவுமே சொல்லாமலிருந்தாள்

வீட்டுக்கு போகலாமென்றேன்
கால் நனைத்து விட்டு செல்லலாமென்றாள்
அலையிலாடியபடியே,

உள்ளங்கையில்
விரல்களால் எதையோ எழுதியவள்
அன்றிரவு அலைபேசியில் பேசவேயில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets