Pin It

Widgets

நுரை தப்பிய கரையிலமர்ந்து
தன் பாதம் சுற்றி
கோடு கிழிக்கத்துவங்கினாள் சந்தியா

காற்றிலாடும் துப்பட்டாவின்
முனை பிடித்து முன்னினைத்து முடிச்சிட்டு
மணலில் இதயம் வரைந்தாள்

காலம் சுழலும் வேகத்தினை
விட்டுச் சென்ற தடங்களை தடயங்களை
அடுக்கிக் கொண்டிருந்தவள்

நீண்ட பெருமூச்சுக்குப் பின்
நலம் விசாரிக்கத்துவங்கினாள்
உன் மனைவி நலமா?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets