Pin It

Widgets

அதுவரை புகைத்து பழகிடாதவன்
சிகரெட் ஒன்றினை பற்றவைத்து
கையில் சூடுவைத்துக்கொண்டான்

கானல் துறந்து மேகம் திரண்ட
யாமத்தின் இடுக்குகளில் சிதறிய
விரக்தியின் முட்கள் சூழ

பிஞ்சுக்குழந்தையின் புட்டத்தில்
விட்டெடுத்த ஊசியின் வலி தாங்காது
அழுமே அதுபோல வீறிட்டு அழத்துவங்கினான்

இரவின் நிசப்தங்கள்
அவன் காதுகளில் ஏதேதோ கொண்டு சேர்க்க
அறையின் கதவை தாழிட சென்றவன்

தெருவிளக்கிற்கு துணையாய் நின்றிருந்த
அவ்விரவின் கடைசி சந்தையிலும் விலைபோகாத
விலைமாதுவை அழைத்துச்சென்றான்

அவளுடனான அறிமுகத்தில் கவிஞன் எனவும்
தன் இடது தொடையில் ஒரு கவிதையும்
வலது தோளில் ஒரு கவிதையும்
எழுதி வாங்கி விடைபெற்று சென்றாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets