Pin It

Widgets

இதழ் சூழ்ந்த செதில்கள் தனை
சுள்ளென சுட்டுவிட
காற்றில் முனகல் தொலைத்து

காம்பினை முட்டி மேலேறுகிறது
இரத்த ரோஜா

சிதறி விழுந்த பனித்துளிகளை
ரசித்து ரசித்து
காற்றில் உடலசைத்து உடலசைத்து

உள் வாங்குகிறது
ஒற்றை ரோஜா

வானம் நிறமாற நிறமாற
வனப்பு ஏறும்
அந்தவொரு ஒற்றை ரோஜா

எவளோ ஒருவளின் கூந்தலில்
எவனோ ஒருவன் தூண்டிலில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets