நூலளவு இரவினை திருடி
அறை நிரப்பியிருந்த
ஒரு கோடைப் பொழுதில்
விழி உருளும் திசையெங்கும்
காற்றில் நீந்திக் கொண்டிருந்தது
திரவ வடிவ பிம்பமொன்று
அலையலையாய் நீந்தும்
அப்பிம்பத்தினை
உள்ளங்கை அழுந்த கசக்கியதில்
அத்திரவ உருவம் இரண்டாய் பிரிந்ததன்
அழகினை ரசிக்க துணிந்து
வாசலில் பார்வை திருப்ப
தாழிட்ட கதவின் இடுக்கின் வழியே
தெரிந்து கொண்டிருந்த நிழலொன்று
கதவை தட்டியதா? தெரியாது
ஒருவேளை இரண்டாய் பிரிந்து
புணர்ந்து கொண்டிருந்த
தனிமையின் ஓசையை
கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம்!
அறை நிரப்பியிருந்த
ஒரு கோடைப் பொழுதில்
விழி உருளும் திசையெங்கும்
காற்றில் நீந்திக் கொண்டிருந்தது
திரவ வடிவ பிம்பமொன்று
அலையலையாய் நீந்தும்
அப்பிம்பத்தினை
உள்ளங்கை அழுந்த கசக்கியதில்
அத்திரவ உருவம் இரண்டாய் பிரிந்ததன்
அழகினை ரசிக்க துணிந்து
வாசலில் பார்வை திருப்ப
தாழிட்ட கதவின் இடுக்கின் வழியே
தெரிந்து கொண்டிருந்த நிழலொன்று
கதவை தட்டியதா? தெரியாது
ஒருவேளை இரண்டாய் பிரிந்து
புணர்ந்து கொண்டிருந்த
தனிமையின் ஓசையை
கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம்!
0 comments
Post a Comment