Pin It

Widgets

நூலளவு இரவினை திருடி
அறை நிரப்பியிருந்த
ஒரு கோடைப் பொழுதில்

விழி உருளும் திசையெங்கும்
காற்றில் நீந்திக் கொண்டிருந்தது
திரவ வடிவ பிம்பமொன்று

அலையலையாய் நீந்தும்
அப்பிம்பத்தினை
உள்ளங்கை அழுந்த கசக்கியதில்

அத்திரவ உருவம் இரண்டாய் பிரிந்ததன்
அழகினை ரசிக்க துணிந்து
வாசலில் பார்வை திருப்ப

தாழிட்ட கதவின் இடுக்கின் வழியே
தெரிந்து கொண்டிருந்த நிழலொன்று
கதவை தட்டியதா? தெரியாது

ஒருவேளை இரண்டாய் பிரிந்து
புணர்ந்து கொண்டிருந்த
தனிமையின் ஓசையை
கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets