Pin It

Widgets

தூக்கம் கலைந்த இரவில்
கனவில் சொல்லிக் கொண்டிருந்த
கவிதையொன்றினை
தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

அக்கவிதை எழுதப்பட்ட கனத்தில்
நான் தூங்கிக்கொண்டிருந்திருக்கலாம்
வாசிக்கையில் மட்டும்
கனவில் வந்து நிற்கிறது

அதன் எழுத்து நடை
இது வரை எழுதிடாததாய் இருப்பினும்
கையெழுத்து என்னுடையதெனவும்
கவிதை எனதென்றும் சொல்கிறது

அந்த நெடுங்கவிதையில் புள்ளியோ
ஆச்சரிய குறியீடோ எதுவுமோ
இடம் பெற்றிருக்கவில்லை
இடைவெளியும் இல்லை

வீரியம் நிறைந்த
சொற்களின் கலவையினை
வேகமாய் பருகியபடி விழிக்கிறேன்

வானில் கேட்கும் அசரீரி போல
குரலொன்று சொல்லிச் செல்கிறது
கனவிலும் விழித்திரு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets