தூக்கம் கலைந்த இரவில்
கனவில் சொல்லிக் கொண்டிருந்த
கவிதையொன்றினை
தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
அக்கவிதை எழுதப்பட்ட கனத்தில்
நான் தூங்கிக்கொண்டிருந்திருக்கல ாம்
வாசிக்கையில் மட்டும்
கனவில் வந்து நிற்கிறது
அதன் எழுத்து நடை
இது வரை எழுதிடாததாய் இருப்பினும்
கையெழுத்து என்னுடையதெனவும்
கவிதை எனதென்றும் சொல்கிறது
அந்த நெடுங்கவிதையில் புள்ளியோ
ஆச்சரிய குறியீடோ எதுவுமோ
இடம் பெற்றிருக்கவில்லை
இடைவெளியும் இல்லை
வீரியம் நிறைந்த
சொற்களின் கலவையினை
வேகமாய் பருகியபடி விழிக்கிறேன்
வானில் கேட்கும் அசரீரி போல
குரலொன்று சொல்லிச் செல்கிறது
கனவிலும் விழித்திரு!
கனவில் சொல்லிக் கொண்டிருந்த
கவிதையொன்றினை
தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
அக்கவிதை எழுதப்பட்ட கனத்தில்
நான் தூங்கிக்கொண்டிருந்திருக்கல
வாசிக்கையில் மட்டும்
கனவில் வந்து நிற்கிறது
அதன் எழுத்து நடை
இது வரை எழுதிடாததாய் இருப்பினும்
கையெழுத்து என்னுடையதெனவும்
கவிதை எனதென்றும் சொல்கிறது
அந்த நெடுங்கவிதையில் புள்ளியோ
ஆச்சரிய குறியீடோ எதுவுமோ
இடம் பெற்றிருக்கவில்லை
இடைவெளியும் இல்லை
வீரியம் நிறைந்த
சொற்களின் கலவையினை
வேகமாய் பருகியபடி விழிக்கிறேன்
வானில் கேட்கும் அசரீரி போல
குரலொன்று சொல்லிச் செல்கிறது
கனவிலும் விழித்திரு!
0 comments
Post a Comment