Pin It

Widgets

கானல் ஓடை

Wednesday, July 18, 2012 | 0 comments »

என் இரவினை நகர்த்தும்
அதிகாரம் வரம்பு மீறல்
யார் கொடுத்தது உனக்கு?

துயர் கூட்டுதல் மகிழ்வூட்டுதல்
இவ்விரண்டையும் கூட
சுயமாய் தீர்மானிக்க அனுமதிப்பதில்லை

மழை இரவு வெப்பப் பொழிவு
பருவ மாற்றத்தில் கூட-நீ
கண்ணயர்வதேயில்லை

வனமொன்றில் பற்றிய தீயில்
வெடித்து அலறும் மூங்கிலினை-நீ
இசை என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

உனக்கு பிடித்தவைகள் யாதெனில்
மயான அமைதி
சடலம் எரியும் வாசனை
வீதியில் சிதறிய பூக்களென பட்டியல் நீட்டுகிறாய்

தூசி தட்டிய புத்தகமொன்றின்
வியர்வை படிந்த வாசனை நுகர்ந்தபடி
எச்சில் ஒழுக வாசிக்கிறாய்

நெருங்க நெருங்க விலகுகிறாய்
மனமென்பது குரங்கு என்றால்
நான் கானல் என்பேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets