Pin It

Widgets

அந்திப் பொழுதில்
ஈரம் படர்ந்த சாலையின் வழியே
பூனை பாதம் வைத்தொருவள் கடந்து போகிறாள்

சன்னல் கம்பிகளுக்கடியில் தொக்கி நிற்கும்
மழைப் பொட்டுகளை
விரல்களால் உடைத்தபடி ரசிக்கத் தொடங்குகிறேன்

சுருட்டிய குடையின் கைப்பிடி கையிற்றுக்குள்
கை நுழைத்து
கை ஆட்டி ஆட்டி முணுமுணுத்தபடி நடக்கிறாள்

இலைகள் உதிர்த்த துளிகளை
மேனியில் வாங்கிக் கொண்டவள்
கணுக்கால் கொலுசு தெரிய மான் ஆகிறாள்

முழுவதுமாய் கடந்தவளிடமிருந்து
தவறிய உடலசைவுகளும் பூவற்ற கூந்தலும்
அறை மெழுகின் ஒளியில் நடனமாட,

அவள் தரிசன நிமிடங்கள் எண்ணி
அனுதினமும்
நிரம்பி வழிகிறது வெற்றுக் கோப்பை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets