இந்த இரவில்
நதியின் துவக்கம் அறிய
முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
மலை வழியாகவோ
மழை வழியாகவோ
உருவாகிடாத நதி அது
அதன் இரைச்சல்கள்
நான் கேட்டிடாதவை
காதில் கேட்கவும் இல்லை
நான் தொலைந்து
நானும் தொலைந்து
மண்டியிட்ட இரவு அது
பதியம் வைத்து காத்திருந்த குமரி போல
பிணையம் வைத்து
மீட்டெடுக்க குழந்தைக்கு காத்திருப்பது போல
அதன் நிமிடங்களை
அதில் எழும் மனதின் படபடப்பினை
விட்டம் விழித்தபடி
மன்றாடிய அந்த இரவின்
உளறல்களும் பிதற்றல்களும்
யாதென அறிய சுவர் தாண்டியும்
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...
இன்று போய் நாளை வா!
நதியின் துவக்கம் அறிய
முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
மலை வழியாகவோ
மழை வழியாகவோ
உருவாகிடாத நதி அது
அதன் இரைச்சல்கள்
நான் கேட்டிடாதவை
காதில் கேட்கவும் இல்லை
நான் தொலைந்து
நானும் தொலைந்து
மண்டியிட்ட இரவு அது
பதியம் வைத்து காத்திருந்த குமரி போல
பிணையம் வைத்து
மீட்டெடுக்க குழந்தைக்கு காத்திருப்பது போல
அதன் நிமிடங்களை
அதில் எழும் மனதின் படபடப்பினை
விட்டம் விழித்தபடி
மன்றாடிய அந்த இரவின்
உளறல்களும் பிதற்றல்களும்
யாதென அறிய சுவர் தாண்டியும்
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...
இன்று போய் நாளை வா!
0 comments
Post a Comment