கடற்கரை செல்லும்போதெல்லாம்
கையை அழுந்தப்பற்றி நடப்பதில்
அலாதி பிரியம் அவளுக்கு
காதோர கூந்தல் எடுத்துவிடும் அழகில் தெரியும்
உப்புக்காற்றில் நனைய விரும்பும்
அவளின் குழந்தை மனது
வெகுநேர பேச்சுக்கு பின்
"ம்" என்ன? என
முதலில் இருந்து கதை கேட்பாள்
பூவோ கடலையோ வாங்க மறுப்பவள்
தவறாமல்
சிறுவர்களின் பெயர் கேட்டுவிடுவாள்
ஒரு மாலையில் பெயர் கேட்டதும்
ஈரம் கசிந்த புன்னகை உதிர்த்தவளிடம்
காரணம் வினவ-தன்
காதல் கதையை சொல்ல துவங்கியிருக்கிறாள்
இனி
என் மனைவிக்கு
தகப்பனாகவும் வாழவேண்டும்!
கையை அழுந்தப்பற்றி நடப்பதில்
அலாதி பிரியம் அவளுக்கு
காதோர கூந்தல் எடுத்துவிடும் அழகில் தெரியும்
உப்புக்காற்றில் நனைய விரும்பும்
அவளின் குழந்தை மனது
வெகுநேர பேச்சுக்கு பின்
"ம்" என்ன? என
முதலில் இருந்து கதை கேட்பாள்
பூவோ கடலையோ வாங்க மறுப்பவள்
தவறாமல்
சிறுவர்களின் பெயர் கேட்டுவிடுவாள்
ஒரு மாலையில் பெயர் கேட்டதும்
ஈரம் கசிந்த புன்னகை உதிர்த்தவளிடம்
காரணம் வினவ-தன்
காதல் கதையை சொல்ல துவங்கியிருக்கிறாள்
இனி
என் மனைவிக்கு
தகப்பனாகவும் வாழவேண்டும்!
0 comments
Post a Comment