Pin It

Widgets

நாய் அதன் குட்டிகளை
வேறிடத்திற்கு கடத்திக்கொண்டிருந்தது
மழைக்காலப் பொழுதொன்றில்


வீதியெங்கும் பிசுபிசுக்கும்
குப்பைகளும் அதன் வாடையும் மறந்து
மின்னலாய் ஈர்க்கின்றன ஈன்றகுட்டிகள்

காம்புகளை சுவைக்க எத்தனிக்கும்
கருப்பு வெள்ளை நிற குட்டியின்
துள்ளல்கள் பசியின் வெளிப்பாடு

தார் சாலைகளாலான மண் வீதியில்
இரு வீட்டுக்கான இடைவெளியோ
கதகதப்பான சூழலோ இல்லாத நெடுந்தூர நடை

கடை வாசலெல்லாம் ஆதிக்க கால்களும்
அத்துமீறல்களும் ஆக்கிரமிக்க
மனித இனத்தின் அனாதை ஆசிரமங்களும்

சிக்னலில் கையேந்தி நிற்கும் சிறுமியும்
கைக்குழந்தையின் எச்சில் வற்றிய விழுங்கலும்
நாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets