Pin It

Widgets

கால்களுக்குள் தவழ்ந்து
முகம் பார்க்கையில் ஏமாறும்
குழந்தையென கழிகிறது பொழுது


ஒரு பரிதவிப்பும் காத்திருத்தலும்
இன்னதென யூகிக்க முடியாத
இத்தருணத்தில் வெறுமையாள்கிறது

இருத்தலில் இருப்பு கொள்ளாமல்
உந்தித்தள்ளும் மெளனவலையில்
சிக்கிய எண்ணங்கள் நீட்சியாக

ஒரு ஊமையின் சொற்களை
கை தேர்ந்தவன் போல மொழிபெயர்க்கிறேன்
யாவும் பிழைகளாகிப்போக

ஒரு கவிதைக்கரு சிதைகிறது
மேலுள்ள வரிகளைப்போல
வலிகளைப்போல!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets