கால்களுக்குள் தவழ்ந்து
முகம் பார்க்கையில் ஏமாறும்
குழந்தையென கழிகிறது பொழுது
ஒரு பரிதவிப்பும் காத்திருத்தலும்
இன்னதென யூகிக்க முடியாத
இத்தருணத்தில் வெறுமையாள்கிறது
இருத்தலில் இருப்பு கொள்ளாமல்
உந்தித்தள்ளும் மெளனவலையில்
சிக்கிய எண்ணங்கள் நீட்சியாக
ஒரு ஊமையின் சொற்களை
கை தேர்ந்தவன் போல மொழிபெயர்க்கிறேன்
யாவும் பிழைகளாகிப்போக
ஒரு கவிதைக்கரு சிதைகிறது
மேலுள்ள வரிகளைப்போல
வலிகளைப்போல!
முகம் பார்க்கையில் ஏமாறும்
குழந்தையென கழிகிறது பொழுது
ஒரு பரிதவிப்பும் காத்திருத்தலும்
இன்னதென யூகிக்க முடியாத
இத்தருணத்தில் வெறுமையாள்கிறது
இருத்தலில் இருப்பு கொள்ளாமல்
உந்தித்தள்ளும் மெளனவலையில்
சிக்கிய எண்ணங்கள் நீட்சியாக
ஒரு ஊமையின் சொற்களை
கை தேர்ந்தவன் போல மொழிபெயர்க்கிறேன்
யாவும் பிழைகளாகிப்போக
ஒரு கவிதைக்கரு சிதைகிறது
மேலுள்ள வரிகளைப்போல
வலிகளைப்போல!
0 comments
Post a Comment