Pin It

Widgets


பின்னங்கழுத்தில் வழிந்தோடும்
நுரையோடு தவழும் சோப்பில்
அவளுக்கான அவனின் முகம்

தேகம் சுமக்கும் எலும்பில்
தொட்டுத்தொடாமல் நழுவும்
மென்விரல்களில் துரோக ஊசி

மழையென தூவும் செயற்கை
நீர் பிரிதலில் தலைதூக்கி
அவனென நினைத்து நனைகிறாள்

உதட்டில் தொட்டுவிழும்
நீர்துளிகளுக்கு சாபம் ஊற்றி
நீரை உறைநீராக்க எத்தனிக்கிறாள்

தொட்டியின் நீர் தீர்ந்தும்
நகராமல் காத்திருக்கிறாள்
முதலிரவின் கலவி முடிந்து,

தொலைத்த காதலனை நினைத்து!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets